Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Sunday, January 6, 2013

ரி - அ. முத்துலிங்கம்


    வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே. 

    பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா சொல்லியிருக்கவேண்டும்! 

    ஒரு பெண் கொஞ்சம் சிவப்பாக இருந்துவிட்டால், கொஞ்சம் கண்களுக்கு கை பூசியிருந்தால், கொஞ்சம் ஒற்றைப் பின்னலை இறுக்கி வாரி மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தால் உடனே இப்படியான கழிசடை எண்ணங்கள் தோன்றவேண்டுமா? அவளை வளைக்க என்ன பாடெல்லாம் பட்டிருப்பார்கள்!

சார்வாகன் – யானையின் சாவு

சுஜாதா – எல்டொரோடா

அ. முத்துலிங்கம் – ஒட்டகம்


    ஒட்டகம்


    சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள்.

    மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள்.

    அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து முதுகிலே சென்று மறைந்தது. அவள் தலை மயிரைப் பற்றி அறியும் ஆவலையும் அது தூண்டிவிட்டது.

அ. முத்துலிங்கம் – பூமாதேவி


    பூமாதேவி


    இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை!

    என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெள்ள மெள்ள அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக் கூடாது; குஷ’யான சமயங்களில் பாடுவதற்கும் ஏலாது. ஏன் விசிலடிக்கக்கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் இங்கே...!

    நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக